நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் மதுரை அரசு மருத்துவமனையில் பலியானதை தொடர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தாய் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் பாண்டியன் தலைமை வகித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

