UPDATED : மே 15, 2026 05:48 PM
ADDED : மே 15, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:வேலை உறுதி திட்ட பணிக்கான சம்பள பாக்கியை விடுவிக்க வலியுறுத்தி சக்கந்தியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையை விரைந்து வழங்க வேண்டும். சக்கந்தியில் நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை அருகே சக்கந்தி ஊராட்சி அலுவலகம் எதிரே அ.இ., விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். வேலை உறுதி திட்ட பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
