UPDATED : ஜூலை 16, 2026 05:07 PM
ADDED : ஜூலை 16, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:தேசிய உணவு பாதுகாப்பு திட்ட முன்மொழிதலை கைவிடக்கோரி சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசலில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி, பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் கொங்கையா முன்னிலை வகித்தார். ஒரு நபருக்கு 7 கிலோ அரிசி மற்றும் தானியம் மட்டுமே தருவோம் என்ற திட்டத்தை கைவிடவேண்டும் உட்பட 13 விதமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
