ADDED : ஆக 24, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.25 -காளையார்கோவில் தாலுகா அலுவலக தலைமை சர்வேயரை கண்டித்து சிவகங்கையில் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., முன்னாள் ஒன்றிய செயலாளர் உடையான் தலைமை வகித்தார்.
ஏ.ஐ.யு.டி.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு சுந்தரராஜ் பங்கேற்றார். காளையார்கோவில் தாலுகாவில் நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்குவதில் தலைமை நிலைய சர்வேயர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். ///
