ADDED : டிச 19, 2024 05:00 AM

சிவகங்கை: சிவகங்கை நீதிமன்றத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி பணிகள், திட்ட விளக்கங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித் சிறப்பு வகித்தார். கண்காட்சியை நீதிபதி, கலெக்டர் திறந்து வைத்தனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் சுப்பையா வரவேற்றார்.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, சார்பு நீதிபதி பாண்டி, மாஜிஸ்திரேட் செல்வம், பயிற்சி நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம் நன்றி கூறினார்.

