ADDED : மார் 30, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காளமேகம் மகன் ரவிச்சந்திரன் 50, இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி.
நேற்று பெரும்பச்சேரி கிராம பகுதியில் உள்ள கிணற்றில் ஆடு விழுந்ததை தொடர்ந்து ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த ரவிச்சந்திரன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
மானாமதுரை தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் அவரது உடலை மீட்டனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.