sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜாதி ஓட்டு கைகொடுக்குமா?: கட்சியினர் விசாரணை ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடும்போட்டி

/

ஜாதி ஓட்டு கைகொடுக்குமா?: கட்சியினர் விசாரணை ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடும்போட்டி

ஜாதி ஓட்டு கைகொடுக்குமா?: கட்சியினர் விசாரணை ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடும்போட்டி

ஜாதி ஓட்டு கைகொடுக்குமா?: கட்சியினர் விசாரணை ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடும்போட்டி


ADDED : செப் 23, 2011 10:56 PM

Google News

ADDED : செப் 23, 2011 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் ஜாதி ஓட்டுகளை நம்பி களத்தில் இறங்குவோருக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதா என கட்சியினர் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவி முதல் கவுன்சிலர்கள் வரை ஜாதி ஓட்டுகளை நம்பி போட்டியிடுவோரை எதிர்த்து களமிறக்கப்படுபவர்கள், ஓட்டுகளை பிரிக்கும் முயற்சி செய்வர். எனவே,ராமநாதபுரம் நகராட்சியில் ஜாதி ஓட்டுகளை நம்பாமல், பிரபலமானவர்களை நம்பி ஓட்டுபோடும் நிலை உள்ளதா? என தி.மு.க.,வினர் விசாரித்து வருகின்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சார்ந்த பிரிவைச் சேர்ந்த தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாற்று பிரிவை சேர்ந்தவர் நின்றால் வாய்ப்பு எப்படி இருக்கும் என தி.மு.க.,வினர் விசாரித்து மாற்றுபிரிவு நபர்களின் பட்டியலையும் தயாரித்துள்ளனர். இதில் அ.தி.மு.க.,-பா.ஜ.,-காங்., உள்ளிட்ட கட்சிகளில் குறிப்பிட்ட ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கும்போது ஜாதி ஓட்டு பிரிந்துவிடும் என்பதால் மாற்று ஜாதியை சேர்ந்த பிரபலமானவர்களின் பட்டியலை தயாரித்து தலைமைக்கு கொடுத்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் தி.மு.க.,வில் லலிதகலா, முன்னாள் எம்.பி.,பவானி, இவரது ஆதரவாளர் நாகநாதசேதுபதி, முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் கிருபானந்தம் ஆகியோர் சீட் கேட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர். காங்., சார்பில் நகர் தலைவர் முத்துராமலிங்கம், வக்கீல் சோமசுந்தரம், அன்புசெழியன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us