/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
/
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
ADDED : ஆக 09, 2025 03:31 AM
சிவகங்கை: அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம், அரசு, உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் ஆக.,11 ல் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி, தாய் பாலுாட்டுவோர் தவிர்த்து) அங்கன்வாடி மையம் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை ஆக., 11 அன்று காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வழங்கப்படும்.
ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்ட 3 லட்சத்து 77 ஆயிரத்து 552 பேர், வயது 20 முதல் 30 க்கு உட்பட்ட 87,625 பெண்கள் என மொத்தமாக 4 லட்சத்து 65 ஆயிரத்து 177 பேர்களுக்கு இம்மாத்திரை வழங்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம், என்றார்.

