/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதாக தி.மு.க., பொய் சொல்கிறது: எச்.ராஜா
/
மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதாக தி.மு.க., பொய் சொல்கிறது: எச்.ராஜா
மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதாக தி.மு.க., பொய் சொல்கிறது: எச்.ராஜா
மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதாக தி.மு.க., பொய் சொல்கிறது: எச்.ராஜா
ADDED : நவ 24, 2025 12:30 AM
திருப்புத்தூர்: ''மத்திய அரசு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு தான் முழுப்பொய் சொல்கிறது,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்படவில்லை. தேவையான கூடுதல் தகவல்கள் கேட்டு மத்திய அரசால் மாநில அரசுக்கு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு சொல்வது முழுப் பொய். திமுக அரசை நம்பவே மாட்டேன்.
தி.மு.க., வினர் 1967ல் மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம் என்று சொன்னவர்கள் தானே. திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்று தான் அர்த்தம். அதனால் அவர்கள் சொல்வது எதையும் நம்ப முடியாது.
அடைந்தால் திராவிட நாடு. இல்லையே சுடுகாடு என்று சொன்னாரே. அது செத்துப்போய் விட்டதா, இல்லையா. அப்புறம் நீங்கள் ஏன் சமஸ்கிருத மொழியைப்பற்றி பேசுகிறீர்கள். இது மொழி வெறுப்பு, மத வெறுப்பு அரசியல். துணை முதல்வர் உதயநிதி ஹிந்து விரோத சக்தி. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப்பணியால் எந்த ஊழியரும் மனஉளைச்சல் அடைந்து உயிரிழக்கவில்லை. இதுவும் பொய் தான் என்றார்.

