sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல் 

/

முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல் 

முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல் 

முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல் 


ADDED : மார் 20, 2024 12:03 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் 85 வயது முதியோர், 40 சதவீதத்திற்கு மேல் பாதித்த மாற்றுத் திறனாளிக்கு தபால் ஓட்டு அளிப்பதற்கான படிவத்தை கோட்டாட்சியர் பால்துரை வழங்கினார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்., 19 ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,537 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதில், 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் ஓட்டு மூலம் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பால்துரை, தாசில்தார் தங்கமணி ஆகியோர் காரைக்குடி அருகே கழனிவாசலில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியோரிடம் தபால் ஓட்டு அளிப்பதற்கான 12 டி படிவத்தை வழங்கினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் மண்டல, உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தலைமையில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் கவிதாபிரியா, கோட்டாட்சியர் பால்துரை, தாசில்தார் தங்கமணி, கந்தசாமி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.






      Dinamalar
      Follow us