/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல்
/
முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல்
முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல்
முதியோர்களுக்கான தபால் ஓட்டு படிவம் வீடு தோறும் வழங்கல்
ADDED : மார் 20, 2024 12:03 AM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் 85 வயது முதியோர், 40 சதவீதத்திற்கு மேல் பாதித்த மாற்றுத் திறனாளிக்கு தபால் ஓட்டு அளிப்பதற்கான படிவத்தை கோட்டாட்சியர் பால்துரை வழங்கினார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்., 19 ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,537 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில், 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் ஓட்டு மூலம் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பால்துரை, தாசில்தார் தங்கமணி ஆகியோர் காரைக்குடி அருகே கழனிவாசலில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியோரிடம் தபால் ஓட்டு அளிப்பதற்கான 12 டி படிவத்தை வழங்கினர். பின்னர் தாலுகா அலுவலகத்தில் மண்டல, உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தலைமையில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் கவிதாபிரியா, கோட்டாட்சியர் பால்துரை, தாசில்தார் தங்கமணி, கந்தசாமி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

