sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு

/

திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஜன 12, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. அதை அப்படியே விட்டு சென்று விடுவதால் சப்ளை இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

திருப்புவனத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருப்புவனம் பேரூராட்சி சார்பில் கோட்டை மற்றும் புதுார் ஆகிய இடங்களில் வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் குழாய் பதிக்கும் ஒப்பந்தகாரர்கள் குழாய் பதிக்கும் பணியின் போது குடிநீர் செல்லும் பழைய குடிநீர் குழாயை சேதப்படுத்தும் நிலையில் அதனை சரி செய்யாமல் அப்படியே போட்டு விடுகின்றனர். குழாய் சேதமடைந்ததால் நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

திருப்புவனம் பழையூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் 20 அடி துாரத்திற்கு குழாய் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இன்று வரை சரி செய்யாததால், பழையூர் பகுதி மக்கள் குடத்துடன் அலைந்து வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us