/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வராத முருங்கைக்காய்
/
மானாமதுரை வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வராத முருங்கைக்காய்
மானாமதுரை வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வராத முருங்கைக்காய்
மானாமதுரை வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வராத முருங்கைக்காய்
ADDED : டிச 06, 2024 05:33 AM
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் கடும் விலை உயர்வு எதிரொலியாக முருங்கைக்காயை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50க்கும்,உருளை ஒரு கிலோ ரூ.70க்கும் விற்பனையானது.
மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது முருங்கைக்காய் விலை அதிகரித்ததை தொடர்ந்து ஒரு கடையிலும் கூட முருங்கைக்காய் விற்பனைக்கு வரவில்லை.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்ற தக்காளி இந்த வாரம் விலை உயர்ந்து ரூ. 60க்கும்,சின்ன வெங்காயம் ரூ. 50, பெரிய வெங்காயம் ரூ.50, கத்தரிக்காய் ரூ.60, கேரட், முள்ளங்கி,சவ்சவ் ரூ.60, பச்சை மிளகாய் ரூ. 80 பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ரூ.160 க்கும், சின்னப்பாகற்காய் ரூ.280 க்கும், உருளைக்கிழங்கு ரூ.70க்கும் விற்கப்பட்டது.