ADDED : மார் 04, 2026 05:35 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் போதையில் பஸ்சை இயக்கிய டிரைவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.
திருப்புவனத்தில் இருந்து கடந்த 1ம்தேதி மேலுார் சென்ற அரசு டவுன் பஸ்சை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த தர்மராஜ் 55, என்பவர் இயக்கினார்.
மடப்புரம் விலக்கு அருகே தாறுமாறாக சென்ற டவுன் பஸ் சாலையோரம் சென்ற வாகனங்களை இடித்து சேதப்படுத்தியது. பஸ்சை பொதுமக்கள் மறித்து டிரைவரிடம் விசாரித்த போது போதையில் இருந்ததால் திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போக்குவரத்து கழக நிர்வாகம் போதையில் பஸ்சை இயக்கிய டிரைவர் தர்மராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
கிளைமேலாளர் உமாகண்ணன் கூறுகையில், டிரைவர் தர்மராஜை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். 1ம் தேதியில் இருந்து அவர் பணிக்கு வரவில்லை. வரும் போது சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்படும், என்றார்.

