sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிப்.,15ல் கல்வி கடன் முகாம் 

/

பிப்.,15ல் கல்வி கடன் முகாம் 

பிப்.,15ல் கல்வி கடன் முகாம் 

பிப்.,15ல் கல்வி கடன் முகாம் 


ADDED : பிப் 10, 2024 04:56 AM

Google News

ADDED : பிப் 10, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கருத்தரங்கு கூடத்தில் பிப்., 15 அன்று கல்வி கடன் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இங்கு செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகள் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கருத்தரங்கு கூடத்தில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் www.vidyalakshmi.co.in இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, சிறப்பு கல்வி கடன் முகாமன்று விண்ணப்ப நகல், உரிய சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும்.

முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவர், பெற்றோரின் இரண்டு புதிய போட்டோ, இருவரும் இணைந்த வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட, வருமான, ஜாதி சான்று நகல், பான் கார்டு, ஆதார் கார்டு நகல், கல்லுாரியில் இருந்து பெற்ற உண்மை சான்று, கல்வி கட்டண விபரம், மதிப்பெண் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us