ADDED : ஜூன் 17, 2026 06:16 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: மின்வாரிய கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளர்களாக மாற்ற கோரி சிவகங்கையில் ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் 9,600 கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும்.
இத்துறையில் காலியாக உள்ள 65 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சம்மேளனம் சார்பில் சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்தனர். தலைவர் சாத்தையா தலைமை வகித்தார்.
பொருளாளர் ஆனந்த செல்வம், செயல்தலைவர் காளிமுத்தன், அமைப்பு செயலாளர் காஜாமொகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
