நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மகேஸ்வரி குழுவினர் முகாம் நடத்தினர்.
மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் கலந்து கொண்டனர்.