/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே தலை துண்டித்து விவசாயி கொலை : ஒருவர் கைது
/
சிவகங்கை அருகே தலை துண்டித்து விவசாயி கொலை : ஒருவர் கைது
சிவகங்கை அருகே தலை துண்டித்து விவசாயி கொலை : ஒருவர் கைது
சிவகங்கை அருகே தலை துண்டித்து விவசாயி கொலை : ஒருவர் கைது
ADDED : ஜூலை 22, 2025 12:27 AM
சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டாகுடியில் விவசாயி சோணைமுத்துவை 65, தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சோணைமுத்து குடும்பம் மதுரையில் வசிக்கிறது. இவர் குடும்பத்தை பிரிந்து 7 ஆண்டுகளாக நாட்டாகுடியில் தங்கி விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு வீட்டு திண்ணையில் சோனைமுத்து அமர்ந்திருந்தார். டூவீலரில் வந்த இருவர் சோணைமுத்துவை வாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர். சோணைமுத்து தலையை மட்டும் எடுத்துக்கொண்டு டூவீலரில் தப்பினர். அப்போது எதிரே வந்த பாண்டி 66, என்பவரையும் அவர்கள் வெட்டினர்.
எஸ்.பி., சிவபிரசாத் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். டி.புதுார் கண்மாயில் கிடந்த சோணைமுத்து தலையை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சோணைமுத்து அண்ணன் மகன் அழகர்சாமி நாட்டாகுடி முருகேசன் மகன் சமயதுரை 25, பி.வேலாங்குளம் முத்துப்பாண்டி மகன் சிங்கமுத்து 25, ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக திருப்பாச்சேத்தி போலீசில் புகார் அளித்தார். சிங்கமுத்துவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது: சோணைமுத்து தோட்டத்தில் சமயதுரையின் மாடு மேய்ந்ததாக இருவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. சமயதுரை தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்த பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியும் என்றனர்.