sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

/

தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்


ADDED : அக் 16, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: விவசாயி இறந்த வழக்கில், சிவகங்கை மாவட்ட த.வெ.க., மாணவரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டியை சேர்ந்த விவசாயி சந்திரன், 54. சிவகங்கை காமராஜர் காலனியில் வசித்தார். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, சிவகங்கை கூட்டுறவுபட்டி அருகே காரில் வந்த போது, எதிரே தமராக்கியை சேர்ந்த த.வெ.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளரான பிரபுகுமார், 40, அருண்பிரகாஷ், 20, ஆகியோர் வந்த கார், மோதுவது போல வந்துள்ளது. இதில், இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

பின், அங்கிருந்து சந்திரன் அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டிற்கு சென்றார். மனைவி ரேணுகாவிடம், தமராக்கி பிரபுகுமார், அருண்பிரகாஷ் இருவரும் தன்னை தாக்கியதில் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார்.

சந்திரனை உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவமனையில் ரேணுகா சேர்த்தார்.

அங்கு சிகிச்சையில் இருந்த சந்திரன், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு உயிரிழந்தார். ரேணுகா புகாரின்படி, தாலுகா போலீசார் பிரபுகுமார், அருண்பிரகாஷ் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us