UPDATED : ஆக 19, 2026 11:25 PM
ADDED : ஆக 19, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை அருகே ஒக்கூர் புதுாரை சேர்ந்தவர் விவசாயி அய்யப்பன் 60.
இவர் ஆடு வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தனது ஆட்டிற்கு இலை வெட்டுவதற்காக ஒக்கூர் ஆசிரியர் காலனியில் உள்ள மரத்தின் மீது அய்யப்பன் ஏறியுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
