ADDED : ஏப் 16, 2025 08:04 AM

காரைக்குடி : சாக்கோட்டை, பள்ளத்துார் பகுதிகளில் விவசாயிகள், கோடை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சாக்கோட்டை பகுதியில் பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறும். கடந்த ஆண்டு மழைகாலங்களில் போதிய மழை இல்லை. ஆனால், அவ்வப்போது, திடீர் புயல் மழை உருவானது. இதனால் சில கண்மாயில் தண்ணீர் கிடந்தாலும், பல கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால், சாக்கோட்டை வட்டார விவசாயிகள் பலரும் விவசாயத்தில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் பள்ளத்தூர், சாக்கோட்டை உட்பட பல பகுதிகளிலும், போர்வெல் மூலம் விவசாயிகள், விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், டீலக்ஸ், சி.எஸ்.ஆர்., ரக நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உரம் உழவு, விதை நெல், கூலி என ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து வருகின்றனர்.