sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி அருகே தொடர் மழை நாற்று நடும் பணியில் விவசாயிகள்

/

காரைக்குடி அருகே தொடர் மழை நாற்று நடும் பணியில் விவசாயிகள்

காரைக்குடி அருகே தொடர் மழை நாற்று நடும் பணியில் விவசாயிகள்

காரைக்குடி அருகே தொடர் மழை நாற்று நடும் பணியில் விவசாயிகள்


ADDED : நவ 07, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகே தொடர் மழை காரணமாக விவசாயிகள் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார் கண்டனுார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் கண்மாய்கள் நிரம்பி உள்ளன. சாக்கோட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் விவசாயிகள் தங்களது வயல்களில் உழவுப் பணி முடித்து விதைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வேலங்குடி, பள்ளத்துார் அருகே விவசாயிகள் தங்களது வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள்,

ஆர்.என்.ஆர்., டீலக்ஸ் பொன்னி, ஏ.எஸ்.டி 16 எனும் குண்டு நெல் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு, உரம், விதைநெல், கூலி என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தொடர் மழை காரணமாக கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us