sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்பாச்சேத்தியில் விரட்டி கடிக்கும் நாய்களால் அச்சம்

/

திருப்பாச்சேத்தியில் விரட்டி கடிக்கும் நாய்களால் அச்சம்

திருப்பாச்சேத்தியில் விரட்டி கடிக்கும் நாய்களால் அச்சம்

திருப்பாச்சேத்தியில் விரட்டி கடிக்கும் நாய்களால் அச்சம்


ADDED : மே 08, 2025 03:16 AM

Google News

ADDED : மே 08, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் வெறிநாய்கள் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை விரட்டி விரட்டி கடிப்பதால் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.

திருப்பாச்சேத்தியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் சலுப்பனோடை, கானுார், கல்லுாரணி, ஆவரங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தங்களது தேவைகளுக்கு திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர். திருப்பாச்சேத்தியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. ரோட்டில் நடந்து செல்லும் மக்களை விரட்டி விரட்டி கடிப்பதால் வெளியில் நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு சிறுவர்களை தனியாக அனுப்பவே முடியவில்லை. மேலும் வீடுகளில் கட்டி போடப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளையும் நாய்கள் கடிப்பதால் அவைகளுக்கும் வெறி பிடித்து விடுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் தெருநாய்களால் பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us