/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் கூட்டு பலாத்காரம் 5 வாலிபர்களுக்கு 'கட்டு'
/
பெண் கூட்டு பலாத்காரம் 5 வாலிபர்களுக்கு 'கட்டு'
ADDED : செப் 20, 2024 01:48 AM
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த, 24 வயது இளைஞருடன் அப்பெண் அருகில் உள்ள காட்டுப்பகுதியில், நேற்று முன்தினம் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த ஏழு வாலிபர்கள் அந்த இளைஞரை தாக்கி, விரட்டிவிட்டு, அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மானாமதுரை சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் படி, பலாத்காரம் செய்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து வாலிபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. மாவுகட்டு போடப்பட்ட அவர்களை, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இரு வாலிபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.