நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி விலக்கு அருகே மரத்தில் நேற்று மாலை அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.
எஸ்.எஸ்.கோட்டை போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., ஜெயமுருகன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.