/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
/
திருப்புவனத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
ADDED : நவ 28, 2024 05:14 AM
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் நேற்று நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.50.44 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
கலெக்டர் தலைமையில் மாவட்ட பிற துறை அதிகாரிகள், அரசனுார் வேளாண்மை விற்பனை மையம், சொக்கையன்பட்டியில் பேவர் பிளாக் சாலை பணி, ஏனாதியில் வீடுகள் சீரமைப்பு திட்டம், ஏனாதி அருகே மடை சீரமைத்தல் பணி, பாப்பாக்குடியில் கணக்கங்குடி கண்மாயில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வெங்கட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள், திருப்புவனம் அரசு மகளிர் பள்ளியில் ரூ.1.70 கோடியில் கட்டிய 8 வகுப்பறை, ரூ.1.64 கோடியில் கட்டிய 6 வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டனர்.
திருப்புவனம் புதுாரில் மக்களிடம் மனுக்கள் பெற்றார். 78 பயனாளிகளுக்கு ரூ.50.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.