ADDED : ஏப் 24, 2025 06:59 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: தடியமங்கலம் அருகே இளையான்குடி ரோட்டில் இண்டேன் எரிவாயு நிரப்பும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு எரிவாயு கசிவு ஏற்பட்டால் அதை எவ்வாறு பாதுகாப்புடன் சரிசெய்வது என்பது பற்றி செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர், இளையான்குடி தாசில்தார், ஆலை மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
