ADDED : ஏப் 25, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஏப்., 25) முதல் மே 25ம் தேதி வரை இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் வயது 5 முதல் 17 க்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, சான்று வழங்கப்படும். பயிற்சி தினமும் காலை 6:30 முதல் 8:30 மணி, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு 97895 39151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்பந்து கழகம் தெரிவித்துள்ளது.

