ADDED : செப் 25, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே அறிவமுது அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு சீருடை வழங்கப்பட்டது.
மட்டிக்கரைப்பட்டி, அரசினம்பட்டி, கோவில்பட்டி, கோபாலபச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 4 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை அறக்கட்டளை தலைவர் முத்துகிருஷ்ணன் வழங்கினார்.