ADDED : பிப் 15, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 12 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன்திருமணத்தை நடத்தி வைத்தார். ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பாரதி, கோட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹிந்து அறநிலைய துணை கமிஷனர் சங்கர்,உதவி கமிஷனர்கள் கவிதா, கணபதிமுருகன், ஞானசேகரன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார்கண்ணன், அறங்காவலர் குழு தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் திருமணம் முடித்த ஜோடிகளுக்கு அரசு சார்பில் 4 கிராம் தாலி, பீரோ, கட்டில், குத்துவிளக்கு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. செயல் அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

