ADDED : செப் 15, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, செப். 16 -
தேவகோட்டை நகர்,அருகில் உள்ள கிராமங்களிலும் , ஹிந்து அமைப்புகள், வேறு சில அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. சதுர்த்தி நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டது. அனைத்து சிலைகளுக்கும் பூஜை நடந்தன. கருதாவூரணியில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.
