ADDED : பிப் 10, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி சித்தி விநாயகர் கோயில் தை மாத படைப்புத்திருவிழா நடந்தது.
விழாவையொட்டி பிப். 9 ம் தேதி காலை 9:00 மணிக்கு கிராம மக்கள் ஊர் மந்தையில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.
இரவு வெள்ளிவேல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.