நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி சமுத்திர ஊருணி தற்போது பெய்த மழை மற்றும் வைகை ஆற்றில் வரும் தண்ணீரால் நிரம்பி உள்ளது.
இந்த ஊருணியை சுற்றி பலர் நடைப்பயிற்சி சென்று வருகின்றனர். ஊருணியை சுற்றியுள்ள கரைகளில் குப்பையாக காட்சி அளிப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இளையான்குடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்குப்பைகளை அகற்றி கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.