ADDED : பிப் 13, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) ஜெயமணி, (நிலம்) சரவண பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் பங்கேற்றனர்.
வீட்டு மனை பட்டா, இடப்பிரச்னை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 258 பேர் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவின் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.