ADDED : ஜன 30, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி இந்து மனிதாபிமான சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் பாரதியார் கவிதை திருவள்ளுவர் கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா, முத்துப்பட்டினம் வித்யாகிரி பள்ளியில் நடந்தது.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மதாபிமான சங்க தலைவர் ராமநாதன் வரவேற்றார்.
முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.