ADDED : நவ 07, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பாண்டி தீர்மானம் வாசித்தார். மகளிர் அணி அமைப்பாளர் லதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் சங்கர், உள்ளாட்சி ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வீரையா, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில குழு குமரேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் தனபால் பங்கேற்றனர். மாநில துணை தலைவர் ஜெசி நிறைவுரை ஆற்றினார்.

