ADDED : பிப் 17, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய், அரசுத்துறைகளில் காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சிவகங்கையில் அரசு ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் பாண்டி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். முன்னாள் மாநில துணை தலைவர் பாண்டி, தமிழ்நாடுகூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் தனபால், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொருளாளர் மாரி நன்றி கூறினார்.