sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனையில் மகப்பேறு எலும்பு டாக்டர்கள் இன்றி அவதி

/

அரசு மருத்துவமனையில் மகப்பேறு எலும்பு டாக்டர்கள் இன்றி அவதி

அரசு மருத்துவமனையில் மகப்பேறு எலும்பு டாக்டர்கள் இன்றி அவதி

அரசு மருத்துவமனையில் மகப்பேறு எலும்பு டாக்டர்கள் இன்றி அவதி


ADDED : நவ 11, 2025 11:54 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, எலும்பு டாக்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

திருப்புத்தூர் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமத்தினர் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதில் முக்கியமாக மகப்பேறு வைத்தியம் உள்ளது. முன்பு மாதம் 35 பிரசவங்கள் நடந்துள்ளன. தற்போது மாதம் 20க்கும் குறைவாகி வருகிறது. காரணம் மகப்பேறுவிற்கான மருத்துவர் இல்லாததே. இதனால் மகப்பேறு மருத்துவத்திற்கான படுக்கை,மருந்துகள் இருந்தும், மகப்பேறுக்கான தனி மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை கிடைக்காது என்று இங்கு வருவதில்லை. இதனால் பிரசவங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இங்கு அதற்கான எலும்பு மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால் மீண்டும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொது மருத்துவத்திற்கு போதிய மருத்துவர்கள் உள்ள நிலையில், எலும்பு முறிவு, மகப்பேறு பிரிவுக்கான டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us