sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரோட்டோர கடைகளில் வரி வசூல்; நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு

/

ரோட்டோர கடைகளில் வரி வசூல்; நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு

ரோட்டோர கடைகளில் வரி வசூல்; நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு

ரோட்டோர கடைகளில் வரி வசூல்; நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு


ADDED : ஜூன் 17, 2025 06:16 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்; திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்துஉள்ள கடைகளில் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூலிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து பலரும் தேங்காய், பூ, பழம், காய்கறி, கீரை உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர்பகுதிகளை கனரக வாகனங்கள் கடக்கவே முடியவில்லை.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் ரோட்டை ஆக்கிரமிக்கா வண்ணம் சென்டர் மீடியன் அமைப்பது உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரோட்டோர கடைகளை அகற்ற முயன்றால் பேரூராட்சிக்கு தினசரி வரி செலுத்துகிறோம் என வியாபாரிகள் அதிகாரிகளிடம் தகராறு செய்கின்றனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் வரி வசூலிக்கக்கூடாது, அவற்றை அப்புறப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us