/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் வளர்ச்சி பணிகளால் lபயனில்லை குறுகிய இடத்தில் மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்
/
இளையான்குடியில் வளர்ச்சி பணிகளால் lபயனில்லை குறுகிய இடத்தில் மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்
இளையான்குடியில் வளர்ச்சி பணிகளால் lபயனில்லை குறுகிய இடத்தில் மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்
இளையான்குடியில் வளர்ச்சி பணிகளால் lபயனில்லை குறுகிய இடத்தில் மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட்
ADDED : டிச 23, 2025 05:43 AM

சிவகங்கை மாவட்டத் தில் வளர்ந்து வரும் பேரூராட்சியாக இளையான்குடி உள்ளது. இங்கு உள்ள 18 வார்டுகளிலும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இளையான்குடி நகர் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை ரோட்டில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சென்னை தலைமைச் செயலகம் வரை சென்று போராட்டம் நடத்தினர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் நகர் விரி வாக்கமாக வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது.
ஆனால் இளையான் குடியில் ஒரு தரப்பினர் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் வகையில் செயல்படுவதால் தற்போது வரை பெயரளவிற்கே இளையான்குடி புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.
மீண்டும் குறுகிய இடத்தில் செயல்படும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கே அனைத்து பஸ்களும் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனை 10 வருடங்களாக மிகவும் சேதமடைந்து அவ்வப்போது இடிந்து விழுகிறது. இதையடுத்து வெளி நோயாளிகள் பிரிவு கட்டடம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இடித்து அகற்றம் செய்யப்பட்டது. குறுகிய இடத்தில் போதிய இடவசதி இல்லாமல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால் நோயாளி கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.
மேலும் இங்கு பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்குவதற்கு குடியிருப்பு இல்லாத காரணத்தால் சில நாட்களிலேயே வேறு ஊர்களுக்கு இட மாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங் களுக்கு இளையான்குடி அரசு மருத்துவமனையை புதிய பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் போதிய வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்து இளையான்குடி பேரூராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோன்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு மருத்துவமனையை தற்போது உள்ள இடத்திலேயே விரிவாக்கம் செய்ய வேண்டும் என போராட்டங் களையும் நடத்தி வருகின்றனர். அதேபோன்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் போதிய இடவசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதனையும் இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி இளையான் குடியில் வளர்ச்சி பணிகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

