நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சோழபுரம் புனித ஜஸ்டின் பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லுாரியில் மனித நேய வாரவிழா நடந்தது.
சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முத்துலட்சுமி, அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப் குமார் முன்னிலை வகித்தனர்.
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் வரவேற்றார். சைபர் கிரைம் எஸ்.ஐ., சதீஷ், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன், கல்லுாரி செயலாளர் ஸ்டெல்லா, முதல்வர் பிருந்தா, எஸ்.ஐ.,க்கள் சேகரன், ஜோதிமணி, அறிவழகன், மஞ்சுளா, பாலமுருகன் கலந்து கொண்டனர்.

