ADDED : ஜூலை 16, 2025 06:56 AM
இளையான்குடி; இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜ்முதீன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார் துாய்மை ஆய்வாளர் தங்கதுரை வரவேற்றார். அலுவலக ஊழியர் ரஹீம் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
செய்யது ஜமீமா, தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி அரசு மருத்துவமனை கட்டடத்தை வேறு பகுதிக்கு மாற்றாமல் இருக்கின்ற இடத்திலேயே விரிவாக்கம் செய்ய வேண்டும்.
நாகூர் மீரா அ.தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி மாவடி வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் சேதமடைந்து கழிவுநீர் தேங்கி இருப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரின் பேகம்,தி.மு.க., கவுன்சிலர்: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜவேலு, சுயேச்சை கவுன்சிலர்: ரூ.3 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வராமல் வெறிச்சோடி காணப்படுவதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
தலைவர் நஜூமுதீன் தி.மு.க.,: கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

