sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி

/

 முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி

 முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி

 முழுமைபெறாத பாலாறு துார்வாரும் பணி


ADDED : நவ 21, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் பாலாறு துார்வாரும் பணி முழுமைபெறாததால், பணிகளை விரைந்து முடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், உப்பாறும் சிங்கம்புணரியில் ஒன்றாக கலந்து திருப்புத்துார் வரை பாலாறு என்ற பெயரில் செல்கிறது. அங்கிருந்து விருசுழியாறு என்ற பெயரில் தொண்டி அருகே கடலில் கலக்கிறது.

இந்த ஆறுகள் ஆக் கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களால் மறைந்து வந்தது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தனியார் பங் களிப்புடன் ஆறுகளை தூர்வார அப்போதைய கலெக்டர் ஆஷா அஜித் முயற்சி மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து 26 கி.மீ., நீள பாலாறும், 2.5 கி.மீ., நீள உப்பாற்றையும் சீரமைக்கும் பணி துவங்கி யது. சிங்கம்புணரி, காளாப்பூர், முறையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு துார்வாரப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை.

மேலும் இரு கரை யிலும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே விரைந்து பணிகளை முடிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us