/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு அதிகரிப்பு
/
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு அதிகரிப்பு
ADDED : ஆக 02, 2025 11:12 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் 167 வழக்குகள் பதியப்பட்டு 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெற்று வருகின்றனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தொடர்ந்து இவற்றை கட்டுப்படுத்தி வருகின்ற னர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2025 ஜன.1 முதல் ஜூலை 31 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6 ஆயிரத்து 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 342 டன் பொது விநியோகத்திட்ட அரிசி, 13 ஆயிரத்து 720 லிட்டர் பொது விநி யோகத் திட்ட மண்ணெண்ணெய், ஆயிரத்து 725 சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 167 வழக்குகள் பதியப் பட்டு 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 ஆயிரத்து 488 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப் பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.