ADDED : பிப் 08, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் அருகேயுள்ள குருந்தம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி பவானி 30.
இவர் 2024ல் குருந்தம்பட்டு பெருங்கரைக் கண்மாய் அருகே நடந்து சென்ற போது அவ் வழியாக வந்த இளைஞர் ஒருவர் பவானி அணிந்திருந்த 2 பவுன் தங்கத் தோடை பறித்துச் சென்றார். கல்லல் போலீசார் விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டது கல்லல் கீழப்பூங்குடி கருப்பையா மகன் ராஜ்குமார் 30 என தெரிய வந்தது.
இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் செல்வராஜ் வாதாடினார். நீதிமன்ற நடுவர் கார்மேக கண்ணன், வழிப்பறியில் ஈடுபட்ட ராஜ் குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

