ADDED : நவ 26, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கீழப்பூங்குடியை சேர்ந்தவர் முருகன் மனைவி பூங்கோதை 63. இவரது மகன் சென்னையில் உள்ளார். கணவர் இறந்த நிலையில் தனியாக கீழப்பூங்குடியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு பூங்கோதை உறவினர்களுடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ள சென்ற திருடர்கள் ஒரு பவுன் 3 கிராம் தங்க நகை, 5 கிராம் வெள்ளி செயின், டிவி, ரூ.12 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
பூங்கோதை மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.