sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு: பாதி அளவே கிடைப்பதால் சிக்கல்

/

சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு: பாதி அளவே கிடைப்பதால் சிக்கல்

சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு: பாதி அளவே கிடைப்பதால் சிக்கல்

சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு: பாதி அளவே கிடைப்பதால் சிக்கல்


ADDED : மார் 17, 2024 12:49 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு தினசரி 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.

மருதுபாண்டியர் நகரில்4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, மதுரை ரோட்டில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, காளவாசல் பகுதியில் 4 லட்சம்லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, அம்பேத்கர் தெரு அருகே பரணி பூங்காவில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி, இந்திரா நகரில் ஒரு லட்சம்லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி உள்ளது.

இவைகள் மூலம் நகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இடைக்காட்டூர் வைகை ஆற்று குடிநீர் மூலமும், திருச்சி காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு முறை, 4 நாட்களுக்கு ஒரு முறை என தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தண்ணீரின் தேவை அதிகமாகவே உள்ளது. கடந்த ஒரு வாரமாக சிவகங்கை நகராட்சியில் பல பகுதிகளில் தண்ணீர் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வராததால் குடிதண்ணீர் கேன் 30 ரூபாய்க்கு வாங்கும் சூழல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், நகருக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. ஆனால் நமக்கு வெறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் காவிரி கூட்டு குடிநீர் திட்டமூலமும், இடைக்காட்டூர் மூலமும் கிடைக்கிறது.

கடந்த சில தினங்களாககாவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. அதேபோல் இடைக்காட்டூரிலும் பைப் உடைந்து பணி நடந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் இவை சரி செய்யப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us