ADDED : ஜன 09, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுார் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன்,ஜெயலட்சுமி பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியின் நோக்கம், எழுத்தறிவு அனைவருக்கும் சென்றடைதல், வாழ்வியல் திறன் பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள்,குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி சட்டம்,அடிப்படை கணித திறன் குறித்து விளக்கப்பட்டது.