ADDED : ஆக 16, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே உலகம்பட்டியில் குமரமுடைய ஐயனார் கோயில் ஆடிப்படைப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
கோயில் அருகே அமைக்கப்பட்ட தொழுவில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அனைத்து மாடுகளுக்கும் விழாக்குழு சார்பில் துணி வழங்கப்பட்டு மரியாதை செய்யப் பட்டது. சுற்று வட்டார கண்மாய், வயல்களில் ஏராளமான கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. காளைகள் முட்டி யதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

