ADDED : அக் 05, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 15 காளைகள், 135 வீரர்கள் பங்கேற்றனர். காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும்.
போட்டியில் அடங்க மறுத்த காளைகளுக்கும் அடக்கிய வீரர்களுக்கும் பரிசு வழங்கப் பட்டது. மாடு முட்டியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.