/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி
/
குடிநீர் வராத மீனாட்சி நகர்: மக்கள் அவதி
ADDED : ஆக 22, 2025 10:00 PM
சிவகங்கை : சிவகங்கை மீனாட்சி நகர் சாஸ்திரி 5 வது தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி வழங்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர். அதை சரி செய்வதற்காக குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து சரிசெய்யும் பணியை செய்தனர். அப்போது துண்டிக்கப்பட்ட இணைப்பு தற்போது வரை சரிசெய்யப்படவில்லை. 6 மாதங்களாக மக்கள் குடிதண்ணீர் இன்றி சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சாஸ்திரி 5 தெருவில் செல்லக்கூடிய குழாய் சேதம் அடைந்துள்ளது. அவற்றை மாற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் குழாய்கள் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றனர்.